உறுதிப்படுத்தப்பட்டது மகிந்த இருக்கும் இடம்! - அவசரமாக வெளியேற்றப்பட்டமைக்கான காரணமும் வெளியானது
பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், மகிந்த விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த அலரி மாளிகையில் இருந்த போது ஆயிரக்கணக்கானவர்களினால் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைப் பாதுகாக்கும் விதமாக தற்காலிகமாக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில நாட்களுக்கு மகிந்த குடும்பம் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கவைக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த குடும்பம் தஞ்சம் அடைந்துள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை இன்று பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.