ஈஸ்டர் தாக்குலில் முன்னாள் ஜனாதிபதிகளின் பங்கு: அரசாங்கத்திற்கு அழுத்தம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கடமை தவறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவை சேவையிலிருந்து நீக்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
கட்டாய விடுப்பில் உள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்ய தேசிய காவல்துறை ஆணைக்கு நேற்று முன்தினம் முடிவு செய்தது.
நீதித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்து
கடமை தவறியமை தொடர்பாக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அவர் குற்றவாளி என ஆணைக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்த நிலையில், கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த, நிலந்த ஜெயவர்தவுக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
