கைதான முன்னாள் கடற்படை தளபதிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன ஒகஸ்ட் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொல்காஹவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று(30) முற்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுஹெர பகுதியில் நபர் ஒருவரை கடத்தி கொலை செய்ய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
காவல்துறை விசாரணை
குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிஷாந்த உலகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் இவரது கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் முன்னதாகவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இது குறித்து முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்னவும் தற்போது கைது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் - திருவிழா
