மாவையின் இறப்பிற்கு வழிவகுத்த உண்மையான காரணம் : அம்பலமாகும் தகவல்கள்
இலங்கை தமிழ் கட்சிகளின் வரலாற்றில், தலைவர் பதவில் இருக்கும் ஒருவரின் பதவி ஏனைய உறுப்பினர்களினால் பறிக்கபட்டு வீட்டிற்கு துரத்தப்பட்ட ஒரு நிலை மாவை சேனாதிராஜாவிற்கு மாத்திரமே நிகழ்ந்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிரியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குடும்பம் என்ற ரீதியில் மாவையிற்கு சிறந்த அரசியல் பக்கபலமும் ஆதரவும் காணப்பட்டது ஆனால் அரசியல் என்ற ரீதியில் அவ்வாறு இல்லை.
காரணம், கட்சியின் அரசியல் அழுத்தங்களாலும் மற்றும் தலைவர் என்ற ரீதியில் அவர் நடத்தப்பட்ட விதத்தினாலும் அவர் கடும் மன அழுத்தத்தில் சிக்கியுள்ளார், இதுவும் அவரின் இழப்பிற்கு ஒரு வகையில் காரணம்தான்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாவையின் இறப்பு அரசியலில் செலுத்தும் தாக்கம், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நகர்வு, தமிழ் அரசியல் களத்தில் மாவையின் இழப்பின் விளைவு மற்றும் மாவையின் இறப்பிற்கான உண்மையான காரணங்கள் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |