பாலியல் தொழில் செய்பவர் போல் நடித்து பணம், நகை உள்ளிட்டவை கொள்ளை!
Sri Lanka Police
Colombo
Crime Branch Criminal Investigation Department
Crime
By Pakirathan
நபர் ஒருவர் தனது மனைவியை பாலியல் தொழில் செய்பவர் போல் நடிக்கச் செய்து, பல்வேறு நபர்களை ஏமாற்றி அவர்களை தனி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்து பணம் நகை மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், கணவன் மனைவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் மொரட்டுவை, மோதர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், மோசடியில் ஈடுபட்ட பெண், அவரது கணவர், கணவரின் நண்பர் மற்றும் நண்பரின் தாயார் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி