ஈரான் - இஸ்ரேல் மோதல்: நான்கு இலங்கையர்கள் படுகாயம்
இஸ்ரேல் (Israel) மீதான சமீபத்திய தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வரும் நாட்களில் அவர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்குமிட வசதி
மேலும் இரண்டு இலங்கையர்கள் தற்காலிகமாக அவர்களது வீடுகளில் இருந்து மாற்றப்பட்டதாகவும், அவர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தூதரகத்தின் ஒரு ஊழியரும் அவரது வீட்டிற்கு சொத்து சேதத்தை சந்தித்ததாகவும் இருப்பினும் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பில் அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
