லெபனானை இலக்கு வைத்துள்ள நெதன்யாகு! இஸ்ரேலிடம் மக்ரோன் விடுத்துள்ள கோரிக்கை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரைக் லெபனானுக்கு விரிவுபடுத்த வேண்டாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும், வெளிநாடுகளின் உத்தரவுகளை பின்பற்றும் ஆயுதக் குழுவாக இருக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் இஸ்ரேல் லெபனானில் தரை படைகளை அனுப்பவோ அல்லது பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவோ கூடாது என்றும் மக்ரோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம்
மேலும், லெபனான் அதிகாரிகள், ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பை முழுமையாக ஏற்க உறுதி அளித்துள்ளனர் என்று மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: Foreign Policy
இதற்காக பிரான்ஸ், லெபனானின் ராணுவத்துடன் ஒத்துழைப்பை அதிகரித்து கவச வாகனங்கள், செயல்பாட்டு மற்றும் லாஜிஸ்டிக் உதவிகளை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், “லெபனான் மீண்டும் ஒரு முறை போரில் இழுக்கப்படாமல் இருக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |