விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்
அடுத்த வருடத்தில் இருந்து 02 பருவங்களுக்கும் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த மாதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்றார். தற்போது நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை.
தேவையான அளவு உரம் கையிருப்பில்
விற்பனை செய்ய முடியாத அளவுக்கு உரங்கள் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
வெகுவாக குறைந்த அரிசி இறக்குமதி
2022 இல், நாட்டிற்கு அதிக அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. 2023ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய சலுகைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் மிகவும் சிரத்தையுடன் பயிரிட்டதால் அரிசி இறக்குமதி வெகுவாகக் குறைந்தது.
இந்த ஆண்டும் அரிசி இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் அரிசியை மக்கள் அதிகமாக உட்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)