எரிபொருள் நுகர்வில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி: அமைச்சு வெளியிட்ட தகவல்
நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவிகிதம் குறைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நுகர்வு குறைவு காரணமாக புதிய எரிபொருள் நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள்
இதேவேளை, மின்னுற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை அதிகம் பயன்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் தெரிவித்ததாவது, 2019, 2020க்குப் பிறகு நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30% குறைந்துள்ளது.அது படிப்படியாக குறைந்து கொண்டு இருக்கிறது.
இதனால் எதிர்மறையான தாக்கமும் காணப்படுகிறது, ஏனெனில் எரிபொருள் நிலையங்களுக்கு வருமானமில்லை, பவுசர்களுக்கு தொழில் இல்லை. நுகர்வு குறையும்போது, இவை அனைத்தும் பாதிக்கப்படும்.
ஆகவே, எண்ணெய் நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதை குறைத்துவிட்டோம். பவுசர்களுக்கும் புதிய அனுமதிகளை இடைநிறுத்தியுள்ளோம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
