எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026-ல் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவுகள் கணிசமாக உயரக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை காரணமாக, வரும் காலத்தில் எண்ணெய் விலைகள் உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் இறக்குமதி செலவுகள்
இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுகளில் எரிபொருள் இறக்குமதி செலவுகள் ஒரு பெரும் பகுதியை உருவாக்குகின்றன என்றும், கடந்த 10 ஆண்டுகளில் மொத்த இறக்குமதிகளில் சராசரியாக கிட்டத்தட்ட 20% ஆக இருந்துள்ளன என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும், 2025-ல் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிகளின் அளவு அதிகரித்த போதிலும், மொத்த செலவு 2024-ல் 4.4 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2025-ல் 4 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள்
கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கிய காரணமாகும்.

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, ஒரு பரல் கச்சா எண்ணெயின் சராசரி இறக்குமதி விலை 2024-ல் 84.7 அமெரிக்க டொலரிலிருந்து 2025-ல் 73.2 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்