குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்காக புதிய முறை ஒன்றை ஒன்று நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) நிர்வாக இயக்குநர் வைத்தியர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், எரிபொருள் விநியோகஸ்தர்களின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள்
அதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களின் உதிரி பாகங்களின் விலை மற்றும் பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, செலவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நடவடிக்கையானது எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் பலன்கள் நுகர்வோருக்குக் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
