எரிபொருள் விலைகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு
அமெரிக்காவும் ஈரானும் 60 நாட்களுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
எனினும், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலைகள் உடனடியாக குறைக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் அநுர கருணதிலக்க அறிவித்துள்ளார்.
உலக சந்தையின் இந்த விலை மாற்றங்கள், ஓகஸ்ட் மாதம் அளவிலேயே இலங்கை போன்ற நாடுகளில் பிரதிபலிக்கும் என்றும், அதுவரை எரிபொருள் வழங்குவதற்கான கியூஆர் ஒதுக்கீட்டு முறை தொடரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சந்தை விலை
இலங்கை வழக்கமாக மாதாந்திர அடிப்படையிலேயே எரிபொருளுக்கான ஓடர்களை மேற்கொள்வதால், உலக சந்தை விலை மாற்றங்கள் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டீசலுக்கு தற்போது 100 ரூபாய் மானியம் வழங்கப்படுவதாகவும், உலக சந்தையில் விலை குறைந்தாலும் அது இந்த மானிய நட்டத்தை ஈடுசெய்யவே பயன்படுத்தப்படுமே தவிர விலைக்குறைப்புக்கு வழிவகுக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |