சுமந்திரன் மீது கஜேந்திரகுமார் பகிரங்கக் குற்றச்சாட்டு

Ilankai Tamil Arasu Kachchi Gajendrakumar Ponnambalam M A Sumanthiran Switzerland
By Independent Writer Feb 13, 2026 02:38 AM GMT
Report

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தமிழ்க் கட்சிகளை ஓரணியில் திரட்டும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முயற்சியைத் தடுக்கும் நோக்கம் எமக்கில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடுத்தினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "தமிழ்த் தேசியப் பேரவை எதிர்வரும் 15ஆம் திகதி சிவில் அமைப்புகளுடன் நடத்தவுள்ள சந்திப்பால், சுவிஸ் தூதரகத்தின் 19ஆம் திகதி முயற்சி கைவிடப்பட்டதா என நான் தூதரகத்திடம் வினவினேன்.

ஜனாதிபதி அநுரவுக்கு கஸ்ஸப தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதி அநுரவுக்கு கஸ்ஸப தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

ஒத்திவைப்புக்கான பின்னணி

ஆனால், சந்திப்பு குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதால் அதன் இரகசியத் தன்மை பாதிக்கப்படலாம் எனக் கருதியே தமிழ்க் கட்சிகள் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதே தவிர, இதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

சுமந்திரன் மீது கஜேந்திரகுமார் பகிரங்கக் குற்றச்சாட்டு | Gajendra Kumar Publicly Accuses Sumanthiran

எனது கோரிக்கையின் பேரிலேயே சுவிஸ் தூதரகம் இந்த முயற்சியை முன்னெடுப்பதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது.

உண்மையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கேட்டுக்கொண்டமைக்கு இணங்கவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

15ஆம் திகதி நாம் நடத்தவுள்ள சந்திப்பைக் குழப்புவதற்காகவே தமிழரசுக் கட்சியினர் இத்தகைய வதந்திகளைப் பரப்புவதாக நான் சந்தேகிக்கின்றேன்.

ஏக்கிய இராச்சிய அரசமைப்புச் சதி

அரசு தற்போது 'ஏக்கிய இராச்சிய' (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தமிழர்களுக்குத் தீர்வாகத் திணிக்க முயன்று வருகின்றது. நாடாளுமன்றத்தில் அவர்களுக்குள்ள பலத்தைப் பயன்படுத்தி இதனை நிறைவேற்ற முடியும்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் நின்று பலமான தீர்மானத்தை எடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.

சுமந்திரன் மீது கஜேந்திரகுமார் பகிரங்கக் குற்றச்சாட்டு | Gajendra Kumar Publicly Accuses Sumanthiran

நாம் 2024ஆம் ஆண்டிலிருந்தே இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். 19ஆம் திகதி சந்திப்பில் பங்கேற்கத் தயாராக இருக்கும் தமிழரசுக் கட்சியினரால், ஏன் 15ஆம் திகதி சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாது?

நாட்டில் இன்று இடியுடன் பலத்த மழை

நாட்டில் இன்று இடியுடன் பலத்த மழை

சர்வதேசத்தின் பார்வை

2029ஆம் ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசமைப்பு ஏற்கப்பட்டால், அதன் பின்னர் தமிழர்களுக்கு இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாகச் சர்வதேசத்திடம் முறையிடக்கூட முடியாத நிலை ஏற்படும்.

இந்தச் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்." என்றார்.

அல்லைப்பிட்டி சிறுவன் மரணத்துக்கு முழுக்காரணம் இவர்களே - சட்டத்தரணி சிறீகாந்தா சீற்றம்

அல்லைப்பிட்டி சிறுவன் மரணத்துக்கு முழுக்காரணம் இவர்களே - சட்டத்தரணி சிறீகாந்தா சீற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  


ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020