காலிமுகத்திடல் போராட்ட கள தாக்குதல் - நடந்தது என்ன ...! வெளிவந்த அதிர்ச்சி தகவல் (படங்கள்)

Sri Lanka Police Gotabaya Rajapaksa Galle Face Riots
By Sumithiran May 17, 2022 09:41 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்காக தாம் வகுத்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென பாதுகாப்புப் படையில் கடமையாற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் கடும் அழுத்தங்களை பிரயோகித்ததாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் காலிமுகத்திடலில் இருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தென்னக்கோனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என இந்த சிரேஷ்ட அதிகாரிகள் தம்மை அழைத்து அழுத்தம் கொடுத்ததாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்ட கள தாக்குதல் - நடந்தது என்ன ...! வெளிவந்த அதிர்ச்சி தகவல்  (படங்கள்) | Galle Face Attack Thwarted By Two Leaders

ஆரம்பம் முதலே காலிமுகத்திடலுக்கு பேரணியாக செல்வதை தவிர்க்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அலரிமாளிகையில் உள்ளவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்து வேறு பாதையில் அனுப்புமாறு தேசபந்து தென்னக்கோனுக்கு அரச தலைவர் பலமுறை பணிப்புரை விடுத்துள்ளார். அதன் பிரகாரம், தேசபந்து தென்னக்கோன் மற்றும் ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்கள் அலரிமாளிகையிலிருந்து வெளியேறிய குழுவினரை நவம் மாவத்தை வழியாக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதி அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட பெருந்தொகையான மக்கள் காலி வீதியூடாக மைனாகோகம மற்றும் கோட்டாகோகம நோக்கி பயணித்திருந்தனர். தேசபந்து தென்னகோன் அவர்கள் குழுவை காலி முகத்திடலை நோக்கிச் செல்வதைத் தடுக்க பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். காலி முகத்திடல் மைதானத்திற்குள் நுழைவதற்கு முன்னர் குழுவை கலைக்க இரண்டு குழுக்கள் நீர் பீரங்கி மற்றும் கலகப் படைகள் வரவழைக்கப்பட்டன.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய வாக்குமூலங்களின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் தனிப்பட்ட முறையில் பேசி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த குழுவினர் காலி முகத்திடலை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் தயாராக இருந்தனர். அப்போது, ​​தேசபந்து தென்னக்கோனை கையடக்கத் தொலைபேசியில் அழைத்த உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், குழுவைக் கலைக்க நீர்த்தாரையோ, கண்ணீர் புகைக் குண்டுகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்ட கள தாக்குதல் - நடந்தது என்ன ...! வெளிவந்த அதிர்ச்சி தகவல்  (படங்கள்) | Galle Face Attack Thwarted By Two Leaders

கலவரக்காரர்களை தடுக்க காவல்துறையினர் கடுமையாக முயன்றும், அதை செயல்படுத்த முடியவில்லை. காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அரச தலைவருக்கு அறிவித்துள்ளதாக தென்னக்கோன் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மோதலை கட்டுப்படுத்துவதற்கும் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துமாறு அரச தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்ட கள தாக்குதல் - நடந்தது என்ன ...! வெளிவந்த அதிர்ச்சி தகவல்  (படங்கள்) | Galle Face Attack Thwarted By Two Leaders

காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது அரச தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததாக தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024