காலி போராட்ட களத்தில் பௌத்த மதத்திற்கு எதிராக வேலைத்திட்டங்கள் நடக்கின்றனவா... இளம் பௌத்த பிக்கு தகவல்
காலிமுகத் திடல் போராட்ட களத்தில் பௌத்த தர்மத்திற்கு எதிரான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் தவறான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நேரில் வந்து பார்த்த பின்னரே உண்மை புரிந்தது எனவும் இளம் பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத் திடலுக்கு நான் சுமார் 10 நாட்கள் கடந்துள்ளது. சமூக ஊடகங்களில் முரண்பாடுகளான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.
காலிமுகத் திடலில் அரசசார்பற்ற நிறுவனங்கள், சிறுபான்மையினர் மற்றும் அந்நிய மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து பௌத்த தர்மத்திற்கு எதிராக வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
எனினும் நான் காலிமுகத் திடலுக்கு வந்த பின்னரே, எனக்கு இந்த இடத்தில் இருக்கும் சரியான விடயம் தொடர்பாகம் புரிதலும் தெளிவும் ஏற்பட்டது. இங்கு வந்துள்ள போராட்டகாரர்களின் பிரதான கோரிக்கை கோட்டா கோ ஹோம். அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் பதவி விலகுமாறே கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் அனைத்து போராட்ட மேடைகளிலும் எந்த சமயத்திற்கும் அவமரியாதையை ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது. எந்த சமயத்தையும் தரம் தாழ்ந்தது என்று கருதி செயற்பட வேண்டாம். அனைத்து சமயங்களையும் அரவணையுங்கள்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்து, இந்த ஊழல் அரசாங்கத்தை விரட்டியடிப்பதே எமது பிரதான நோக்கம். எந்த சமயத்திற்கு எதிராகவும் செயற்படுவதில்லை என்பதை போராட்டகாரர்கள் அனைத்து மேடைகளிலும் நினைவூட்டி வருகின்றனர் என அந்த பௌத்த பிக்கு கூறியுள்ளார்.