கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரைப் பாதுகாத்து வந்த காவல்துறை சிறப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 30 அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
வாக்குமூலங்கள்
அதன்படி, அவர்களின் தொலைபேசிகளை சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கொலை சம்பவம் தொடர்பாக 15 சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொலைத் திட்டம்
அத்தோடு, கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள தற்போது தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
