எரிவாயு கொள்வனவு ஒப்பந்தத்தில் மோசடி : யாரோ ஒருவரின் சட்டைப்பையில் 10 பில்லியன் ரூபா
அரசாங்கம் எரிவாயு கொள்கலன்களின் வெடிப்பு பிரச்சினையை வழமை போன்று வேறு தளத்திற்கு கொண்டு செல்கின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு முழுவதும் எரிவாயு கசிவுடன் தொடர்புடைய வெடிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறன. இதுவரை 30க்கும் மேற்பட்ட எரிவாயு கொள்கலன்களின் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த வெடிப்புகளால் நாட்டு மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் வழமை போன்று இப்பிரச்சினையையும் வேறு தளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பது வருந்தத்தக்கது.
மேலும் வெடிப்பது எரிவாயு கொள்கலன்கள் அல்ல என்றும் ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்புகளின் மீது குற்றம் சாட்டி, பொறுப்புள்ள அமைச்சர்கள் யாரைப் பாதுகாக்கப் பார்க்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறோம்.
மிகவும் பாதகமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு எரிவாயு கொள்வனவு செய்வதால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.
அந்த ஒப்பந்தத்தின் மூலம் மோசடி நடந்துள்ளது என்பது தெளிவாகிறது.லிட்ரோ நிறுவனத்திற்கு குறைந்தது 10 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது யாரோ ஒருவரின் சட்டைப்பையில் விழுந்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த மோசடியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மக்களை ஆபத்தில் ஆழ்த்திய வன்னம் எரிவாயு கொள்கலன்களின் கொள்ளளவை மாற்றினார்களா என்ற நியாயமான சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இதே போல் எரிவாயு கொள்கலனின் கொள்ளளவை மாற்றிகொள்கலனை இதற்கு முன்னதாகவே சந்தைக்கு விடுத்து வாயுவின் கலவை மாற்றப்பட்டது என்பது இரகசியமல்ல.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல அவர்கள்,எரிவாயு தொடர்பான வெடிப்புகள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதை பொதுமக்கள் அறியும் வகையில் கூட வெளியிடப்படவில்லை.
இலங்கை தர நிர்ணய சபையிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்குக் கூட இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
எரிவாயு தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது அமைச்சர்கள் சபையில் இல்லாதது குறித்து சபாநாயகர் அவர்களே கவலை வெளியிட்டார்.
அரசதலைவரால், முன்பு போலவே இது குறித்து விசாரணை செய்ய பெரிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சார்ந்த உண்மையான சிக்கலை மூடி மறைப்பதற்கான ஒரு முயற்சியே அன்றி இது வேறு ஒன்றும் இல்லை.
இதற்குள் கலவையை மாற்றிய எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கும் அல்லது தீர்ந்துவிடும். இப்பிரச்னையை இப்படியே முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிகிறது.
இந்த தீவிர மோசடியை இனிமேலும் மேற்கொள்ளாது, எரிவாயு மீதான மோசடி நடவடிக்கைகள் மற்றும் வாயு கலவையை மாற்றுவதன் மூலம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்
வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகிறது.
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 6 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)