தமிழினப்படுகொலைக்கான நீதி: ஐநாவில் கோரிக்கை மனு - அநுர அரசுக்கு நெருக்கடி
United Nations
Tamils
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
இலங்கை அரசால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை, பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழ் அமைப்பொன்று கையளித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59ஆவது கூட்டத்தொடரின் போது இந்த மனு கையளிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், இதே கூட்டத்தொடரில் இலங்கையின் போர் காலத்தில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைப்பற்றி சர்வதேச விசாரணைகள் மற்றும் நீதிமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் கீழுள்ள காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
