இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka
By Pavan Oct 07, 2023 10:41 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் நெதர்லாந்திலுள்ள மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆராய வேண்டுமென ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் பூகோள அரசியல் தாக்கம் செலுத்துவதாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய போது ஆனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் இனவாதம் மற்றும் பாகுபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நாட்டின் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதோடு உடல் ரீதியில் பலர் இனப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும் பௌத்த பிக்கு (காணொளி)

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும் பௌத்த பிக்கு (காணொளி)

சர்வதேச விசாரணை

இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கையை முன்வைக்கும் முகமாக கடந்த 10 ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டவராக மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினராக நான் இதில் பங்கு கொள்கிறேன்.

இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை | Genocide In Sri Lanka

எனினும், பேரவை பொறுப்புக்கூரல் விடயத்தில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியது. இனப்படுகொலைக்கு தீர்வு காண்பதன் முக்கிய அம்சமாகிய சர்வதேச விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில் : சந்திரிக்கா திட்டவட்டம்

சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில் : சந்திரிக்கா திட்டவட்டம்

தீர்ப்பை ஆராயுமாறு கோரிக்கை

இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மேற்கத்திய நாடுகளால் தயாரிக்கப்பட்டவை. இனப்படுகொலைக்கான நீதி கிடைக்காமை குறித்து நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் கடந்த செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் பூகோள அரசியல் கொண்டுள்ள தாக்கம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை | Genocide In Sri Lanka

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஆராயுமாறு நான் பேரவையிடம் கோருகிறேன்.

இதனடிப்படையில், பேரவையின் தவறை அறிந்து அதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026