முகநூல் காதல் - 15 வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு..!
முகநூல் மூலம் காதல் கொண்ட 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.
சிறுமியை வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறையைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த இளைஞர் முகநூல் ஊடாக சிறுமியுடன் தொடர்பைப் பேணியுள்ளார்.
சந்தேக நபர் கைது
இதனையடுத்து சிறுமியை சந்தித்த குறித்த இளைஞன் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்து சென்று பல நாட்கள் தங்கவைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது மகள் இனந்தெரியாத இளைஞனுடன் வீடொன்றில் தங்கியிருப்பதாக சிறுமியின் தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தாய் திவுலப்பிட்டிய காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்ததையடுத்து சிறுமி தாயின் பாதுகாப்பில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
