இந்தியாவின் தடை உத்தரவால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள அமெரிக்கா
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதனால் உலகளாவிய ரீதியில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வந்த கனமழையின் காரணத்தால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அரிசிக்கு ஏற்படவிருக்கும் தட்டுப்பாட்டினைத் தவிர்க்கும் நோக்கத்தில் இந்தியாவின் மத்திய அரசாங்கம் பாஸ்மதி அரிசி தவிர்ந்த ஏனைய அரிசிகளின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.
இந்த முடிவினால் முதலில் நெருக்கடியை சந்தித்த நா டாக அமெரிக்கா உள்ளது.
அரிசி தட்டுப்பாடினால் கடுமையாக பாதிக்கப்படும்
அமெரிக்காவை தொடர்ந்து துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் அரிசித் தட்டுப்பாடினால் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் தடை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
இதனால் பல்பொருள் அங்காடிகளை நோக்கி அரிசி வாங்க மக்கள் விரைந்தவண்ணம் உள்ளனர்.
மக்கள் கூட்டமாக வந்தபடி உள்ளனர்
இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள இந்திய கடைகளிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக அரசி வாங்க வந்தபடி உள்ளனர்.
இதன் காரணமாக, அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற கட்டுப்பாட்டில் அரிசி விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அரிசியின் விலையை உயர்த்தி உள்ளது.
அமெரிக்காவில் அரிசிக்கான கிராக்கி அதிகரித்துள்ள நிலையில், பல கடைகள் அரிசியின் விலையை உயர்த்தி உள்ளன.
இதுவரை 22 டொலரிற்கு விற்பனை செய்யப்பட்ட அரிசிப் பையின் தற்போதைய விலை 47 டொலராக அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஏறத்தாழ இது இரண்டு மடங்காகும்.