புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
2027ஆம் ஆண்டு உலக வெப்பநிலையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கக்கூடும் எனக்காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் “எல் நினோ” காலநிலை மாற்றம் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அமெரிக்காவின் நோவா (NOAA) மற்றும் ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றின் தரவுகளின்படி, ஜூன் மாதத்திற்குப் பிறகு “எல் நினோ” உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவு வெப்பம்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பசிபிக் பெருங்கடலின் அடியில் அதிகளவு வெப்பமான நீர் சேமிக்கப்பட்டுள்ளதால், “லா நினா” காலம் முடிவுக்கு வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுவாக “எல் நினோ” உருவான அடுத்த ஆண்டே அதன் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்பதால், 2027ஆம் ஆண்டு உலகின் மிக வெப்பமான ஆண்டாக அமையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது புவி வெப்பமடைதலின் அளவை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டிச் செல்ல வைக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் கடும் வறட்சியும், அமெரிக்கக் கண்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சாலைக் காலத்திற்கு முந்தைய நிலையை விடப் புவி வெப்பம் அதிகரிப்பது மனித குலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனக் காலநிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 14 மணி நேரம் முன்