இஸ்லாமிய மாணவர்களை இலக்குவைத்து அடிப்படைவாத போதனை! சர்ச்சையை கிளப்பும் ஞானசாரர்
கேகாலை- மாவனல்லை மஸ்ஜித் அல் உதா பள்ளிவாசலில் இஸ்லாமிய மாணவர்களை மூளைச் சலவை செய்வதோடு அடிப்படைவாதம் ஊட்டப்படுவதாக கலகொடாத்தா ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் நன்மை
மாவனல்லை மஸ்ஜித் அல் உதா பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற இஜ்திமா நிகழ்வில் மாணவர்களுக்கு அடிப்படைவாதம் போதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தான் முஸ்லிம் மக்கள் தொடர்பில் கதைப்பதை நிறுத்தியுள்ளேன். ஆனாலும் நாட்டின் நன்மை கருதியே இதை தெரிவித்துளேன்.
இதன்படி இலங்கையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் இந்த இஜ்திமா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான அடிப்படைவாதங்கள் இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
நாம் 2014 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்குவதாகக் குறிப்பிட்டோம். அச்சந்தர்ப்பத்தில் எம்மை பிரிவினைவாதிகள் மதவாதிகள் என்றவாறு தூற்றினர்.ஆனால் என்ன நடந்தது என்று அனைவரும் அறிவர்.
மேலும், நாம் இவ்வாறான கருத்துக்களை ஆய்வு செய்து ஆதாரங்களுடனே தெரிவித்தோம்.அரசிடமோ அல்லது வேறு அமைப்பிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த விடயங்களாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ள நிலையில் எவ்வாறு இஜ்திமா ஒன்றை நடத்த முடியும்?
இதற்கமைய ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் அஜ்ஜுல் அக்பரின்,சகோதரர்களான நதீர் மௌலவி உள்ளிட்ட சிலர் சிறையில் உள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அவதானமாக இருப்பதற்காகவே நாம் சில தரவுகளை வெளிப்படுத்தினோம். ஆனால் அரசியல் வாதிகளின் பொய்யான கூற்றுக்களால் நாம் தெரிவிக்கும் கருத்துக்கள் மழுங்கடிக்கப்பட்டன” என கூறியுள்ளார்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 21 மணி நேரம் முன்
