இலங்கையில் தங்க விலையில் பாரிய வீழ்ச்சி : வெளியான தகவல்
இலங்கையில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சுமார் 2000 ரூபாயினால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்
இந்தநிலையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (09) தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 377,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த வார ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 388,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அத்துடன் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 408,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் 24 கரட் பவுண் ஒன்று 420,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்றைய தினம் 5095 அமெரிக்க டொலர் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |