கனேடிய மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான தகவல்
Government of Canada
Canada
By Sumithiran
கனடாவில் தற்போது குளிர்காலம் ஆகையால் மக்களின் எரிபொருள் செலவினைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் உதவித் தொகையை வழங்கத் தீர்மானித்துள்ளது.
குளிர்காலத்தில் வீடுகளை வெப்பமாக்கிக் கொள்வதற்கு வினைத்திறனான மாற்று சக்தி வளம் பயன்படுத்துவோருக்கு அரசாங்கம் உதவு தொகை வழங்க உள்ளது.
ஐந்தாயிரம் கனேடிய டொலர்கள் வரை கொடுப்பனவு

சுமார் ஐந்தாயிரம் கனேடிய டொலர்கள் வரையில் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. வீடுகளை வெப்பமாக்கிக் கொள்ள எண்ணெய் தாங்கிகளையும் ஹீட் பம்புகள் வினைத்திறனானவை என தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பான முறையில் எண்ணெய் தாங்கிகளை அகற்றவும் ஹீட் பம்புகளை பொருத்தவும் இவ்வாறு உதவு தொகை அரசாங்கம் வழங்க உள்ளது.
இவ்வாறு எண்ணெய் தாங்கிகளை மாற்றுவதனால் ஆயிரக் கணக்கான டொலர்களை வருடாந்தம் சேமிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி