குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நற்செய்தி
வரவிருக்கும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது வாழ்க்கைச் செலவைக் குறைத்து மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும காத்திருப்போர் பட்டியலில் உள்ள 800,000 குடும்பங்களுக்கு சதோச விற்பனை நிலையங்கள் மூலம் தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.5000 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 50% தள்ளுபடியில் அதாவது ரூ. 2,500 இற்கு பெற வாய்ப்பு கிடைக்கும்.
லங்கா சதோசவால் உள்ளடக்கப்படாத பகுதிகளில் உள்ள தகுதியுள்ள பயனாளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்தப் பொதியை பெற முடியும்.
நிவாரணம்
இந்த சிறப்பு தள்ளுபடியானது, தற்போது அஸ்வேசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள எட்டு லட்சத்து பன்னிரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பத்து மூன்று (812,753) குடும்பங்களுக்குக் கிடைக்கவுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் திகதி தொடங்கும் இந்தத் திட்டம் ஏப்ரல் 13 ஆம் திகதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும், மேலும் குறித்த நிவாரணம் தகுதியான பெறுநர்களுக்கு முறையாகப் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுத்தமான வழிமுறையும் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கொண்டாடப்படும் முதல் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
