உடன் விசாரணைக்கு உத்தரவிட்ட கோட்டாபய
Gotabaya Rajapaksa
Nimal Siripala De Silva
Sri Lanka Police Investigation
By Sumithiran
விசாரணை நடத்த உத்தரவு
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (ஜூலை 5) நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு அரச தலைவர் உத்தரவிட்டுள்ளதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகுவார்
இதன்படி, விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகுவார் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி