சட்ட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கோட்டாபய: அடுத்தடுத்து அநுர கொடுக்கும் அடி...!
பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை குறித்த பாரிய எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது.
அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கீடு செய்த விவகாரமே இந்த விசாரணைக்கு அடிப்படை என்பதால், இது அவர் மீதான ஒரு பலமான சட்ட நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், வரும் 13ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலையாகும்போது, வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனாதிபதி என்ற பாதுகாப்பு கவசம் தற்போது இல்லாத நிலையில், கடந்த கால முறைகேடுகளுக்காக அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் News Insight நிகழ்ச்சி......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |