விமான நிலையத்தில் சிக்கிய சீனப் பிரஜைகள்
இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 9 சீனப் பிரஜைகள், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்த்தி நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களிடமிருந்து சுமார் 24 மில்லியன் ரூபாயிற்கும் அதிக மதிப்புள்ள மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணை
இறக்குமதி விதிமுறைகள் மீறப்பட்டதைக் காரணம் காட்டி, இலங்கை சுங்கத்துறை அப்பொருட்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இணையம் வாயிலாக நிதி மோசடிச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வானூர்தி நிலைய காவல்துறை பாதுகாப்புப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |