அமரிக்காவில் ட்ரம்புக்கு கிடைத்த பலம்: தீவிரமடையும் ஈரான் போர்..! போருக்கு செனட் சபை ஆதரவு
ஈரான் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் தோல்வியடைந்தது.
பெப்ரவரி 28 அதிகாலை வேளையில் தொடங்கிய ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் போர் நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
டொனால்ட் ட்ரம்ப் "இனப்படுகொலை போர் குற்றங்களில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்துகிறார்" என்றும், "அணு ஆயுதக் குறியீடுகளை (Nuclear Codes) வைத்திருப்பதற்கு அவர் மிகவும் ஆபத்தானவர்" என்றும் பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போரை நிறுத்தக் கோரி
60 வீத அமெரிக்கர்கள் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை எதிர்க்கின்றனர் என ரொய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்கு தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி ஜனநாயகக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட இந்த 'போர் அதிகாரத் தீர்மானம் 52-47 என்ற வாக்கு கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
இதன் மூலம், ஈரான் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி ஆறு வாரங்கள் கடந்த நிலையிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு அவரது குடியரசுக் கட்சிக்குள் பலமான ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள்
இவ்வாறான பின்னணியில், ஃபாக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக டிரம்ப் கூறினார் .

மேலும் வார இறுதியில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மோதல் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியாக மத்தியஸ்த நாடான பாகிஸ்தானின் இராணுவத் தளபதி புதன்கிழமை தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |