கோட்டாபயவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நாட்டின் அரச தலைவரின் சம்பளத்துடன் ஒப்பிடுகையில், தாதி சேவைக்கு அதனை விட அதிக சலுகைகள் கிடைப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்( Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற புதிதாக 153 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இதொழில் அல்ல, சேவை நீங்கள் செய்யும் சேவைக்கு கொடுப்பனவாக, சம்பளம் வழங்கப்படுவது வேறு விடயம். ஆயினும் நாம் சிறந்த சேவையை நிறைவேற்றுவதற்காகவே தாதி சேவையில் இணைக்கின்றோம்.
அரச தலைவரின் சம்பளம் தொண்ணூறு ஆயிரம் ரூபாய், அதனை விட தாதியர்களுக்கு வசதிகள் கிடைக்கின்றன, வசதிகளை பெற்றுக்கொள்ளும் நாம் சில குறைபாடுகள் இருந்தாலும் முடிந்தளவுக்கு சிறப்பான சேவையை செய்ய வேண்டும்.
இந்த நிகழ்வுக்கு பிரதமரும், அரச தலைவரும் வந்துள்ளனர். நினைவுபடுத்தினால், எப்போதும் மறுக்க மாட்டார்கள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அண்மைக் காலத்தில் இருந்து அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் எம்மைச் செவிமடுக்கின்றார்.
இதுதான் தேவைப்படுகிறது. சில அமைச்சர்கள் இருந்தனர். பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்பதில்லை என்பது மட்டுமல்ல, கதவுகளைக் கூடத் திறப்பதில்லை. அப்படியான செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் இருந்தனர். தற்போதும் உள்ளனர்.
இல்லையெனக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
