கோட்டாபய மாலைதீவில் தஞ்சமடைந்தமை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ராஜதந்திர ரீதியில் இடைமாறல் வீசாவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை அடுத்து கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறி கடந்த 13 ஆம் திகதி மாலைதீவுக்கு சென்று நேற்று அங்கிருந்து சிங்கப்பூரை சென்றடைந்தார்.
கேள்வியெழுப்பிய மாலைதீவு எதிர்க்கட்சி
இந் நிலையில் அவர் மாலைதீவில் தரையிறங்கியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியது.
இதனையடுத்து மாலைதீவு அரசாங்கம் தமது விளக்கத்தை வழங்கியிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இலங்கையின் இராணுவ வானூர்தியில் கோட்டாபய ராஜபக்சவும், அவரது பாரியாரும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் மாலைத்தீவுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக மாலைதீவின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.