தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்
தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தனது 85 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (30) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பாலவாக்கத்தில் உள்ள அஜித் குமாரின் இல்லத்தில் இறுதிச்சடங்குள் நடைபெற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலரும் இரங்கல்
தாயாரின் மறைவுச் செய்தியறிந்து துபாயில் இருந்த அஜித் குமார் சென்னைக்கு விரைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 30, 2026
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித்…
கடந்த 2023 இல் உடல்நலக்குறைவு காரணமாக அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் காலமானார்.
இதேவேளை அஜித் குமாரின் தாயாரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |