வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த ஜனாதிபதி பொது மன்னிப்புப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய சிறைகளில் உள்ள 61 கைதிகளுக்கு இன்று (30) இந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
33 கைதிகள் விடுதலை
இவர்களில் 33 கைதிகள் வெசாக் தினமான 2026.05.30 அன்று சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இன்று மற்றும் நாளை சிறப்பு தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |