சிங்கப்பூர் சென்ற கோட்டாபய எப்போது நாடு திரும்புவார்?
return
gotabaya
singapore
By Jaso
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி நாடு திரும்பும் திகதியை வெளியிட முடியாது என செய்தித் தொடர்பாளர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கும் அவர் சமூகமளிக்கவில்லை.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்