ஆளும் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் (படங்கள்)
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோரது தலைமையில் இன்று அலரி மாளிகையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இக்கூட்டத்தின் போது சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அடுத்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மின் நெருக்கடிக்குத் தீர்வு காணல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டன.
எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விசேட விளக்கமளித்தார்.