விவசாயிகளுக்கான உர மானியம் : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
விவசாயிகள் உர மானியங்களைப் பெற்றால், அவர்கள் தங்கள் அறுவடையில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் ஒரு சட்டத்தை வகுக்க அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கே.டி லால்காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்து ஒரு வாரம் கடந்துள்ள போதிலும், அரசாங்க நெல் கிடங்குகளுக்கு நெல் விற்பனை இன்னும் மெதுவாகவே நடைபெற்று வருகின்றது.
நெல் விற்பனை
இதற்கிடையில், பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல்லுக்கான உத்தரவாத விலை போதுமானதாக இல்லை என்று இன்னும் புகார் கூறி வருகின்றனர்.
2024 மகா பருவ நெல் அறுவடை தொடங்கிய நிலையில், விவசாயிகள் அரசாங்கத்திடம் நெல் கொள்முதல் செய்யத் தொடங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
உத்தரவாத விலை
இதனடிப்படையில், நெல்லுக்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, மேலும் நெல் அறுவடைகளை வாங்குவதற்காக அரசாங்க நெல் கிடங்குகளும் திறக்கப்பட்டன.
இதற்கிடையில், வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், அரசாங்கம் வழங்கும் நெல்லுக்கு உத்தரவாத விலை போதுமானது எனவும் தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில், விவசாயிகள் தங்கள் அறுவடையில் ஒரு பகுதியை அரசாங்க நெல் கிடங்குகளுக்குக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)