சரணடையும் நிலையில் ஹமாஸ்...! முடிவுக்கு வரும் தருவாயில் காசா போர் - ட்ரம்பின் திடீர் அறிவிப்பு
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர (a monumental step) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வியாழக்கிழமை கையெழுத்தான ஒப்பந்தத்தின் பிரதி சர்வதேச ஊடத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த ஒப்பந்தத்தின்படி துல்லியமான ஆயுதக் குறைப்புத் திட்ட வரைவு 14 நாட்களுக்குள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சர்வதேச சரிபார்ப்பு அமைப்பின் ஒப்புதல் மற்றும் அனைத்துத் தரப்பினரின் உடன்பாட்டிற்கு உட்பட்டு கால நீட்டிப்புகள் தேவைப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு
"இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமாகவும் சவாலாகவும் இருந்தன. மேலும் சாத்தியமான சிறந்த தீர்வை எட்டுவதற்கு நாங்கள் முயன்றோம்" என்று ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் காசி ஹமாத் அல் ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களைப் படிப்படியாக ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.
காசாவின் நிர்வாகம் புதிய பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும், இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து வெளியேறிய பின், சர்வதேச அமைதிப்படை மற்றும் புதிய பாலஸ்தீன காவல்துறையினர் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் என தெரியவந்துள்ளது.
இஸ்ரேலுக்குச் சந்தேகம்
இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகே ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பதில் இஸ்ரேலுக்குச் சந்தேகம் உள்ளது.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், இதன் முழுமையான அமுலாக்கம் இரு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
| ய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |