மீண்டும் work from home: அரச ஊழியர்கள் 4 நாட்கள் வேலை.! அரச தரப்பு தகவல்
அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டீசல் உள்ளிட்ட எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, அவற்றைச் சேமிப்பதற்காக அவசர தேவை அரசாங்கத்துக்கு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் 'வீட்டிலிருந்து வேலை செய்யும்' உத்தி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நான்கு நாள் வேலை
இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சின் செயலாளர் பியதிஸ்ஸ ஆங்கில நாளிதழொன்றுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவலான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இருப்பினும், இப்போதைய நிலவரப்படி உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |