நூலிழையில் தொங்கும் ரணில் அரசின் பெரும்பான்மை
நூலிழையில் பெரும்பான்மை
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் 6 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சி மாறுதல் மற்றும் சிலர் நாடாளுமன்றத்திற்குள் சுயேச்சையாக இயங்கவுள்ளதாக அறிவித்ததன் காரணமாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சமபலத்தில் நெருங்கி நிற்கும் வகையில் நாடாளுமன்றம் மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஆரம்பத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 157 எம்பிக்களின் ஆதரவு இருந்த நிலையில் தற்போது அது 119 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக வெளியேறிய அணி
இறுதியாக அரசாங்கத்துடன் இருந்த டலஸ் அழகப்பெரும உட்பட 13 பேர் எதிர்க்கட்சியில் இணைந்தது, விமல் வீரவன்ச தலைமையிலான கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சுயேட்சையாக மாறியதன் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமையால் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள மேலும் 06 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழக்குமானால் பெரும்பான்மை தொடர்பில் அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்படும்.