அரசாங்கத்திற்கு முதுகெலும்பும் இல்லை அமைச்சர்கள் எவருக்கும் அறிவும் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி
மக்கள் பற்றி எண்ணும் அளவுக்கு அமைச்சர்கள் எவருக்கும் அறிவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சீனாவின் உரக் கப்பலை நிராகரிக்கும் அளவுக்கு கூட அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை அந்த கப்பலில் இருக்கும் மலக்கழிவுவை பசளையாக மாற்றவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
நிராகரிக்கப்பட்ட உரக் கப்பல் ஊடாக கிடைக்கும் தரகு பணம் காரணமாகவே அரசாங்கம் நிராகரிக்காமல் இருக்கின்றது.
கமத்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு எதிரில் வந்து பேசுவதை பார்த்தால், அந்த மலக்கழிவுகள் அடங்கிய கப்பலை அரசாங்கம் நிராகரிக்காது என தெரிவித்துள்ளார்.