மகிந்தவின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ..: அநுர அரசை கடுமையாக எச்சரிக்கும் மொட்டு

SLPP Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa
By Sumithiran Dec 13, 2024 08:57 PM GMT
Report

உலகில் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் (mahinda rajapaksa)116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்கியதன் மூலம் அவருக்கான பாதுகாப்பை மீறியுள்ளதாகவும் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பாகும் என சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க இன்று (13) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகிந்தவின் செயற்பாட்டை மறந்துபோன அரசாங்கம்

நாட்டின் தேசிய பாதுகாப்பு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்றாலும், தேசிய பாதுகாப்பை சரியாக மதிப்பிடாமல், ஆழமாக ஆராயாமல், தேசிய பாதுகாப்பை குழிதோண்டிப் புதைக்கும் பல முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது என்றார்.

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ..: அநுர அரசை கடுமையாக எச்சரிக்கும் மொட்டு | Government Responsible For Mahindas Life

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சுமார் மூன்று மாதங்களாக இவ்வாறு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ரவீந்திர ஜயசிங்க, மகிந்த ராஜபக்சவே பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததை இந்த அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார் .

மகிந்தவின் பாதுகாப்புக்கான செலவு : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

மகிந்தவின் பாதுகாப்புக்கான செலவு : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலையும், அரசாங்கத்தை வழிநடத்தும் சதிகார சக்திகளையும் அரசாங்கம் பின்பற்றுகிறது என்பதை இவ்வாறான தீர்மானங்கள் நிரூபிப்பதாகவும், மிக மோசமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் தாம் என்பதை தற்போதைய அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் அவர் தெரிவித்தார். 

மூன்று மாதங்களாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

அவரைப் பாதுகாப்பது ஒரு நாடு என்ற ரீதியில் நாட்டின் பிரதான பொறுப்பு எனவும் அதற்கு அரசியல் அர்த்தமில்லை எனவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ..: அநுர அரசை கடுமையாக எச்சரிக்கும் மொட்டு | Government Responsible For Mahindas Life

ஜனாதிபதி அநுரகுமார(anura kumara) அரசாங்கம் கடந்த மூன்று மாதங்களாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கடந்த மூன்று மாதங்களாக மேற்குலக மற்றும் உள்ளூர் சக்திகளின் தேவைகளை பிரதிபலிக்கும் பல வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு

சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு

முன்னாள் ஜனாதிபதிகள் பல அரச நிறுவனங்களை தமக்குள் வைத்திருப்பதாக விமர்சித்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 94 அரச நிறுவனங்களை தமக்குக் கீழ் வைத்திருப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. கடந்த மூன்று மாத கால ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நம்பிக்கைகளை அரசாங்கம் உடைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023