பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது

Batticaloa Pregnancy Sexual harassment Sri Lanka Police Investigation
By Sumithiran Jan 24, 2023 05:29 PM GMT
Report

  பாடசாலை செல்லும் சிறுமி கர்ப்பமான நிலையில் இன்று சிசுவை பிரசவித்து பாழடைந்த காணியில் வீசிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் கர்ப்பத்திற்கு காரணமான அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

டெங்கு ஒழிப்பு பணிகள்

பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது | Government Servant Arrested For Impregnating Girl

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் டெங்கு வேகமாக பரவி வருவதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு ஒழிப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஏறாவூர் பகுதியிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தப்பகுதியில் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆணொருவர்,வீடுகளை சோதனை செய்யயும் நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தியதால் கர்ப்பம்

பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது | Government Servant Arrested For Impregnating Girl

இதன்போது அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தி அவரை கர்ப்பமாக்கியுள்ளார். பாடசாலை சென்று வந்த குறித்த சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் பாடசாலை செல்வதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் இன்றையதினம் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். இவ்வாறு குழந்தையை பிரசவித்த அவர் அருகிலுள்ள பாழடைந்த காணியில் அந்த சிசுவை வீசியதாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரச உத்தியோகத்தர் கைது

பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது | Government Servant Arrested For Impregnating Girl

இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணமான 29 வயதான அரச உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ​அத்துடன், கைது செய்யப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஏறாவூர் காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025