தமிழர் பகுதியில் மகனுக்கு போதைப்பொருள் வழங்கிய தாய் தந்தை...! மோப்ப நாயால் நேர்ந்த கதி
புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப்பொருள் வழங்க முற்பட்டதாக உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (9.3.2025) வவுனியா (Vavuniya) - பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இளைஞர் ஒருவர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தற்கு 6 மாத புனர்வாழ்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காவல்துறை மோப்ப நாய்
தற்போது 4 மாதங்கள் நிறைவடையில் நிலையில் குறித்த இளைஞரை பார்வையிடுவதற்காக குருநாகல் பகுதியில் உள்ள காவல்துறை நிலையம் ஒன்றில் குற்றத்தடுப்பு பிரிவில் உப காவல்துறை பரிசோதகராக கடமையாற்றும் தந்தையும், காவல்துறையினராக கடமையாற்றும் தாயும் வருகை தந்துள்ளனர்.

புனர்வாழ்வு நிலையத்திறகுள் சென்று தமது மகனை பார்வையிட்ட போது அவர்கள் இருந்த இடத்தை நோக்கி காவல்துறை மோப்ப நாய் வந்ததை அவதானித்த அவர்கள் தமது பையில் இருந்த பொதி ஒன்றை எடுத்து வெளியே வீசியுள்ளனர்.
இதனை காவல் கடமையில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் அவதானித்துள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
உடனடியாக மோப்ப நாயின் உதவியுடன் அதனை சோதனையிட்ட போது அதில் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மோப்ப நாய் அதனை வீசிய இளைஞரின் தந்தையான உப காவல்துறை பரிசோதகரையும் அடையாளம் காட்டிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உப காவல்துறை பரிசோதகரை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |