பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக சிங்கள மக்களிடமிருந்து கிடைத்த பேராதரவு (படங்கள்)
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொரு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி நாடுமுழுவதும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இதற்கு மிகப்பாரியளவில் ஆதரவு கிடைத்திருந்தது.
இந்நிலையிலேயே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொரு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றிருந்த குறித்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும் கொண்டிருந்தனர்.
குறிப்பாக சிங்கள மக்கள் அதிகளவில் ஒன்றுகூடி பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் கையொப்பமிட்டிருந்தனர்.
“இன்றைய நாள் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியான நாள் காரணம் சிங்கள மக்களும் அதிகளவில் ஒன்று கூடி பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி கையொப்பமிட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.






