மாயமான துப்பாக்கி....! சிக்கிய காவல்துறை அதிகாரிகள்
மத்துகம காவல் நிலையத்தின் காவல்துறை பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்துகம காவல் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மத்துகம காவல் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போனதாக நேற்று (1) அறிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
மத்துகம காவல் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பில் இருந்த கைத்துப்பாக்கியும், 10 தோட்டாக்கள் அடங்கிய மெகஸின் ஒன்றுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகப் காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஆவணங்களைப் பரிசோதித்த போதே, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் அவை காணாமல் போயுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மத்துகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |