வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் - ஒருவர் சுட்டுக்கொலை
அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 62 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை உயிரிழந்த நபரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்த இனந்தெரியாத மூன்று பேர் கொண்ட குழுவினால் பாதிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் மகனின் இருப்பிடத்தைக் கண்டறிய ஒரு படுக்கையறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை

எவ்வாறாயினும், அச்சமயத்தில் அறைக்குள் படித்துக் கொண்டிருந்த பாதிக்கப்பட்டவரின் பேத்தியால் சந்தேக நபர் காணப்பட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, பாதிக்கப்பட்ட நபர் வெளியே சென்றதாக கூறப்படுகிறது, அப்போது வெளியே நின்றிருந்த மற்ற இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் அவரை சுட்டுக் கொன்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.