தமிழர் பிரதேசத்தில் தொடரும் காவல்துறையினரின் அராஜகங்கள்

Sri Lanka Police Mannar Sri Lanka
By Shalini Balachandran Apr 03, 2024 07:27 AM GMT

மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இணைந்து காவல் நிலையம் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்று(02) கடுமையான தாக்குதல் மேற்கொண்ட நிலையில் குறித்த குடும்பஸ்தர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவல்துறையினர், மன்னார் பள்ளிமுனை கிராமத்திற்கு நேற்று முன் தினம்(01) திங்கட்கிழமை மாலை சென்று பிரிதொரு நபரின் பெயரை கூறி பிரதீபனை விசாரித்துள்ளனர்.

இதன் போது குறித்த வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் (வயது-42) என்ற குடும்பஸ்தர் இருந்துள்ளார்.

யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

காவல்துறை

அங்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரை கேட்ட போது அவர் இல்லையென பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் தொடரும் காவல்துறையினரின் அராஜகங்கள் | Guy Beaten By Police In Mannar Attack

உடனடியாக பிரதீபனின் இரு கையடக்க தொலைபேசியையும் காவல்துறையினர் பறித்ததோடு அவருடைய மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு மன்னார் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பிரதீபன் நேற்றைய தினம்(02) மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து அங்குள்ள அதிகாரிகள் மன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள இரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்...அது என்ன தெரியுமா!

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள இரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்...அது என்ன தெரியுமா!

கூரிய ஆயுதம் 

இதையடுத்து குறித்த குடும்பஸ்தர் மன்னார் காவல்நிலையம் நிலையம் சென்ற போது மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் தொடரும் காவல்துறையினரின் அராஜகங்கள் | Guy Beaten By Police In Mannar Attack

பிரதீபன் ஆவணங்களை காவல்துறையினருக்கு வழங்கியதையடுத்து கையடக்க தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளை கேட்டபோது மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி கூரிய ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தாக்கியதாக பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது மக்கள் மற்றும் ஏனைய காவல்துறையினர் பார்த்துக் கொண்டு இருந்ததோடு அவர் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டார்.

பால்மா உள்ளிட்ட 9 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பால்மா உள்ளிட்ட 9 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

மனித உரிமைகள்

என்னிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை அத்தோடு என்னிடம் பறித்த பொருட்களையும் தரவில்லை.

தமிழர் பிரதேசத்தில் தொடரும் காவல்துறையினரின் அராஜகங்கள் | Guy Beaten By Police In Mannar Attack

என்னை செல்ல காவல்நிலையத்தை விட்டு செல்ல சொன்னதையடுத்து நான் வைத்தியசாலைக்கு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த குடும்பஸ்தர் மன்னார் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது மனைவி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

33 ஆண்டுகால அரசியல் பயணம் : இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன்சிங்

33 ஆண்டுகால அரசியல் பயணம் : இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன்சிங்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024