ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கேரளாவில்! பா.ஜ.க மாநிலத் தலைவர் கண்டனம்
இஸ்ரேலில் ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர், கேரளாவின் மலப்புரத்தில் ஒருமைப்பாட்டு இளைஞர் இயக்கம் ஏற்பாடு செய்த மெய்நிகர் பேரணியில் பங்கேற்றதாக தெரிவக்கப்படுகிறது.
மலப்புரத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் இளைஞர் பிரிவுடன் தொடர்புடைய ஒருமைப்பாட்டு இளைஞர் இயக்கம் ஒன்றே அந்த மெய்நிகர் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்போது, ஹமாஸ் தலைவர் கலீத் மாஸல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் உரையாற்றும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்
இந்நிலையில், பேரணியில் மாஸலின் மெய்நிகர் உரையை பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கடுமையாக கண்டித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் அவர் கேரள காவல்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கேரளாவின் மற்றுமொரு இடத்தில் இன்று இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து பேரணி ஒன்றை நடத்தியது.