தாக்குதல் அச்சம் : லெபனானிலிருந்து தப்பிச் செல்லும் ஹமாஸ் தளபதிகள்
பெய்ரூட்டை தளமாகக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தலைவர்களில் பெரும்பாலானோர் படுகொலைகளுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக லெபனான் தலைநகரில் இருந்து தப்பியோடிவிட்டனர்,என ஹமாஸின் ஆதாரத்தை மேற்கோள்காட்டி KAN செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி வெளியிட்டுள்ளது.
காஸாவை தளமாகக் கொண்டஹமாஸ் அமைப்பின் ஆதாரத்தின்படி, சலேஹ் அல்-அரூரி கொலையைத் தொடர்ந்து ஹமாஸ் தங்கள் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தளபதி படுகொலை
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேருடன் அரூரி கொல்லப்பட்டார்.

அரூரி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸின் ஒக்டோபர் 7 படுகொலையின் முதன்மைத் திட்டமிடுபவர்களில் ஒருவராக மட்டும் பார்க்கப்படவில்லை.
சிரியா மற்றும் துருக்கிக்கு
KAN அறிக்கையின்படி, ஹமாஸ் அதிகாரிகள் லெபனானை விட்டு சிரியா மற்றும் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டனர். கூடுதலாக, மூத்த தலைவர் காசி ஹமாத் கத்தாருக்கு தப்பிச் சென்றதாகவும், அரூரியின் படுகொலைக்குப் பிறகு லெபனானுக்குத் திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்